Monday, August 27, 2018

வாழ்த்து

வாழ்த்து மட்டுமே நான்...!

பாலையில் பரிதவித்தேன்- பாற்கடல் நீ.!
உலைநீரில் உளமிட்டேன் - உடனுறை நீ!

முள்ளிலே பயணித்தேன் - பாதம் நீ!
தவறிலே தடமிழந்தேன்  - வேதம் நீ!

கருகினால் சாய்ந்திடும் தோளும் நீ!
மருகினால் மனந்தேடும் தாளும் நீ!

வாடினால் விசும்பாய் மாறுவாய் நீ!
தேடினால் தேடுபொருள் ஆகுவாய் நீ!

ஓரெழுத்தாய் இயங்குகின்ற  ஒற்றைப் பதமாய் நீ!
நானிணையும் வேளையிலே இரட்டை கிளவியாய் நீ!

சமரிட்டு சந்தியில் நின்றால், முந்திவருவாய் நீ!
சரித்திரம் எனக்கே என்றால், பிந்திவருவாய் நீ!

கறுப்பு வெள்ளை-  புறம் அகமாய்  நீ!
மறுப்பு இல்லை - எனக்கு சுகமாய் நீ!

நீ... நீ...நீயென எல்லாமும் நீயே ஆனாய்!
நான் நானாயிருக்கவும்  காரணம் ஆனாய்!

வாதையிலா வாழ்வு பெற
வாழ்த்து மட்டும் சொல்லுகிறேன்!
ஏனெனில்,
இந்நாள் என் நாள்!

பிறந்த நாள்  வாழ்த்துகள்!





2 comments:

  1. Good evening mama.I am sherin.A Heartful congrats to your wonderful poem."ஓரெழுத்தாய் இயங்குகின்ற ஒற்றைப் பதமாய் நீ!
    நானிணையும் வேளையிலே இரட்டை கிளவியாய் நீ!

    சமரிட்டு சந்தியில் நின்றால், முந்திவருவாய் நீ!
    சரித்திரம் எனக்கே என்றால், பிந்திவருவாய் நீ!"
    Super and awesome lines mama."வாழ்த்து மட்டுமே நான்" கவிதைக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள் மாமா👌👌👏👏

    ReplyDelete
    Replies
    1. பிரியமுள்ள ஷெரின்....
      மனம் நிறைந்த நன்றிகள்.
      உளம் கனிந்த வாழ்த்துகள்.
      It's a special wish for me , thanks pa.

      Delete