Tuesday, July 17, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 17

நிக்கோலஸ்II  புனிதரா - கொடுங்கோலனா??

ஜூலை 17.... இன்று!

       மிகச்சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்,  1918ஆம் ஆண்டு, ஜூலை 17 ஆம் நாள், ரஷ்யப் பேரரசின் மன்னன் நிக்கோலஸ் II, மனைவி அலெக்ஸாண்ரா, நான்கு பெண் பிள்ளைகள்  மற்றும் ஒரே மகன் , ஏக்தெரின்பர்க் நகரத்தில் ரஷ்ய போல்ஷ்விக் பொதுவுடைமைக் கட்சியின் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.

       அதிகாலை இரண்டு மணிக்கு எழுப்பப்பட்ட ராஜ குடும்பத்தினர், இப்தீவ் இல்லத்தில் , யாகோவ் யுரோவ்ஸ்கி என்பவரின் தலைமையிலான 10  வீரர்களால் சுடப்படும்போதுதான் , இவர்கள் பாதுகாப்பு தருவதற்காக வந்தவர்கள் அல்ல என்பதை மன்னர் அறிந்து கொண்டார். அணிந்திருந்த ஆபரணங்கள் உதவியால் முதல் சுற்றில் உயிர் பிழைத்த பிள்ளைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
       
இரண்டாம் நிக்கோலஸ் மன்னனுக்கு நான்கு பெண் பிள்ளைகள். ஐந்தாவதாகப் பிறந்த ஆண் மகன் அலெக்ஸி பரம்பரை நோயான ஹீமோஃபிளியா B வகையா(ராஜ வம்ச நோய்!) பாதிக்கப்பட்டவன். மரணத்தின் கதவுகள் திறக்கப்பட்டது கூட அறியாமல், நாங்கள் அமர்வதற்கு நாற்காலிகள் இல்லையா என அப்பாவியாகக் கேட்ட பேரரசியின் ஆணைப்படி, இரு நாற்காலிகளில் அமரவைத்தே சுட்டுக் கொன்றனர் போல்ஷ்விக் படையினர்!.

            மீண்டும்- 1998 ஆம் ஆண்டு, இதே ஜுலை 17ஆம் நாள்- அந்நாளைய ரஷ்யா அதிபர்  போரிஸ் எல்சின்  தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 1918ல் கொல்லப்பட்ட இரண்டாம் நிக்கோலஸ் குடும்பத்தினர் அனைவரது எலும்புகளும் (முறையான DNA ஆய்வுகளுக்குப் பிறகு) உரிய மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இதனை ரஷ்ய வரலாற்றின் சிறப்பு மிக்க நாள் என எல்சின் அறிவித்தார்.

                   செமட்டிக் மதத்திற்கு எதிரான பிரச்சனைகள், சிவப்பு ஞாயிறு போராட்டம் என பல்வேறு காரணங்களால் Nicholas the bloody என போல்ஷ்விக் ஆதரவு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால்  மறுபுறம், ஜார் வம்சத்து கடைசி அரசரான இரண்டாம் நிக்கோலஸ் , சர்வதேச மற்றும் Russian Orthodox Church அமைப்பால் கி.பி.2000வது ஆண்டில் புனிதர் என புனிதப்படுத்தப்பட்டார்.  Romanov sainthood day என ஜூலை 17 அறிவிக்கப்பட்டது. அவரது தியாகம் பெருமைப்படுத்தப்படுவதாக திருச்சபை அறிவித்து.
               
          இரண்டாம் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.

 “கொடுங்கோல் மன்னன் – புனிதர்”,  என இரண்டு துருவங்களில் வரலாறு குறிப்பிடும் இரண்டாம் நிக்கோலஸ், உண்மையில் யாராக இருக்கக் கூடும்?  வரலாற்றைப் புரிந்து கொள்வதென்பது , அவரவர் பார்வையைப் பொருத்ததா?

No comments:

Post a Comment