Sunday, September 9, 2018

இடராயினும் இதயம் நீயே!


இடராயினும் இதயம் நீயே!


வேலற்ற போர்வீரன் நான்-இரு
காலற்று தார்ச்சாலையில்-பருகப்
பாலற்ற சேயாகிறேன்

ஒளிராத பாதைகளில்-கடுங்
குளிரான பாறைகளில்-இளந்
தளிராக வழி பார்க்கிறேன்.

தடையற்ற துன்பங்களில்-ஓடும்
மடையற்ற வெள்ளங்களில் நானும்
படையற்ற கோ ஆகிறேன்.

தாளாத சோகங்களில்-பொன்
ஆகாய மேகங்களில் - நான்
போகாத இடம்போகிறேன்.

மறுக்கின்ற மனதுக்கெல்லாம்- நீர்
அறுக்கின்ற கரையாயினும்- பூ
சொறிகின்ற மரமாகுவேன்!

பிளக்கின்ற கரமாயினும் -அது
தளர்கின்ற வேளைகளில்-ஒரு
நிலம்போல நான் தாங்குவேன்.

வெறுத்தாலும் ஒதுக்காத கார்மேகமாய்- யார்
மறுத்தாலும் வருகின்ற ஓர்காலியாய்-எனை
ஒறுத்தாலும் உனைத் தேடுவேன்!.

No comments:

Post a Comment