Tuesday, September 4, 2018

முடிவிலாப் பயணம்

விபத்தில் முகிழ்த்த விதையின் பயணம்!


எங்கோ ஒரு மகரந்தம்
ஏதோ ஒரு சூலுடன்
ஒட்டிக் கொண்டதன்
வெற்றிச் சுவடு மட்டுமே நான்.

சொந்த நிலம் தூர எறிந்தது; எனை
எந்த நிலமும்  ஏற்க மறுத்தது.

நுரையீரல் தொடாதிருக்க – எனை
அணுகாது அகன்றது காற்று.

கார் மேகம் ஒருநாளும்
நீர் காட்டவில்லை – என்
வேர் தொட்டதில்லை.

இருளை எரிக்கும் சூரியன் ஏனோ,
எரிச்சல் காட்டியே நகர்ந்தது.

நாளும் பொழுதும் சாகிறேன்!
அனலில் விழுந்த -
விதையாய் வேகிறேன்.!

இனி,
மண் தேடியே
மடி தேடியே
மடிவேனா?
மடிந்தால்
எனையேந்திடும்
நிலந்தேடியே
முடிவேனா?

விதியே....விதியே....
எனை என் செய்ய நினைத்தாயோ?

No comments:

Post a Comment