Thursday, January 17, 2019

மீண்டும் வருவான்


மீண்டும் வருவான்!


கடந்த இரவின்
நடுநிசி வேளையில்,
ஓசைப்படாமல் அருகில் வந்து சிரம் தொட்டு எழுப்பினான்.
நேசமாய் சில வார்த்தைகள்
ஏன் அப்படிச் செய்தாய்
ஏன் இப்படிச் செய்யவில்லை என காரமாய் சில வார்த்தைகள்.
குலவினான் கொஞ்சினான்.
தொட்டுத் தொட்டு பேசினான்.
சேர்த்து வைத்த அன்பினை அவசர அவசரமாய்
வழங்க , 
கணங்களில் நிறைந்தது பேரானந்தக் கோப்பை.
பிறகு  ஆகாய வானில் 
பறவைச் சுவடு போல 
சிரித்துப் பறந்தான் 
தும்பை  மலர் அன்ன.

இன்று -
நிற்கும் இடமெல்லாம்
ஆயிரம் துண்டுகளாய் 
சிதறிக் கிடக்கிறது என் மூளை.
சேர்த்து உருட்டி 
எடுக்கப் பார்த்தேன்.
பாதரசத் துளிகளாய்
நழுவுகிறது வாழ்வு.

No comments:

Post a Comment